இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Thursday, December 23, 2010

விக்கிலீக்ஸினால் ஏற்படபோகும் இன்னுமோர் உலக மகா யுத்தம்.



அண்மைக்காலமாக விக்கிலீக்ஸ் உருவாக்கிவிட்டிருக்கும் பரபரப்பு இன்னும் தணியவில்லை.விக்கிலீக்ஸிற்கும் அதன் நிறுவுனர் Julian Assange ற்கும் ஆதரவாகவும் எதிராகவும் உலகெங்கும் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஒரு நாட்டின் உள்விவகார தகவல்களை திருடுவது. அதனை வெளியிடுவது என்பன தண்டனைக்குரிய குற்றமாகும். தற்போதைய சுழல், எல்லையற்ற இணையம்,கருத்துச் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் Wikileaks ற்கும் அதன் நிறுவுனரிற்கும் ஆதரவான குரல்களும் , இதனைத் தொடர்ந்து அனுமத்தித்தால் நாடுகளின் இரகசிய உள்வீட்டுத் தகவல்கள் எல்லாம் வெளிப்படைத் தன்மையின் பெயரால் சென்றடையக் கூடாதவர்களிற்கெல்லாம் சென்றடைந்து தீவிரவாதிகளை ஊக்குவிக்கும், இறுதியில் நாடுகளிடையில் குழப்பங்களை உருவாக்கி இன்னுமோர் உலக யுத்தத்திற்கு வழிவகுத்துவிடும் Wikileaks ற்கும் நிறுவுனர் Assange ற்கு எதிரான குரல்களும் பரவலாக  எழுந்தவாறுள்ளன.
இலங்கை சமந்தமான 3000 தகவல்களும் உள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

எது எப்படியோ தீவிரவாதிகளுக்கு நிறையவே உதவிகள் செய்து கொண்டிருக்கிறது விக்கிலீக்ஸ்.

No comments:

Post a Comment