இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Friday, November 30, 2012

எனக்கு பிடிக்காத ஒருவர் "அப்துல் கலாம்"

எனக்கு பிடிக்காத ஒருசில மனிதர்களிலும் ஒருவர் அப்துல் கலாம்.
எனக்கு பிடிக்கத்தற்க்கு பல காரணங்கள் இருந்தாலும், அணு ஆயுதங்கள், ஏவுகணைகள் தொடர்பான கண்டு பிடிப்புகள் எனக்கு இந்நபரை பிடிக்காததிற்க்கு  முக்கியமான காரணமாகும். இவருக்கு இந்திய ஏவுகணை நாயகன் என்றும் பெயருண்டு.
இருந்தும் அவருடைய பல விடயங்கள் வியப்பிலும், சிந்தனையில் ஆழ்த்துபவை. அண்மையில் முகப்புத்தக பதிவில் " தமிழ் வளர்ப்போம் " என்ற பக்கத்தில் பகிரப்பட்டிருந்த பதிவில் புற நாநூறுவில் உள்ள " யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்ற வசனத்தினை ஆங்கில வடிவத்தினை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேசிய போது தெரிவித்தார். தமிழில் கேட்க்கும் போது எனக்கு " யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்பதன் அர்த்தம் புரியவும் வில்லை, அறியவும் முற்படவுமில்லை. ஆனால் அதே வசனத்தினை ஆங்கிலத்தில் கேட்க்கும் போது அதன் அர்த்தத்தினை இலகுவாக புரிந்து கொள்ள கூடியதாக இருந்தது.

கண்டிப்பாக இந்த வீடியோவினை பாருங்கள்


யார் இந்த அப்துல் கலாம்..?

கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், ஒரு படகுச் சொந்தக்காரரான ஜைனுலாப்தீன் அவர்களுக்கும், இல்லத்தரசி ஆஷியம்மா அவர்களுக்கும், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில், மகனாகப் பிறந்தார். அவர் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர் ஆனதால், இளம் வயதிலேயே, அவருடைய குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்காக, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். அவர் பல மத சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர் என்றாலும், ஒரு மத வழக்கத்தையே பின்பற்றினார். பள்ளி முடிந்ததும், கலாம் அவரது தந்தையின் வருமானத்திற்குப் பங்களிக்கும் பொருட்டு , செய்தித்தாள்கள் விநியோகத்தில் ஈடுபட்டார். தனது பள்ளிப்பருவத்தில், கலாம் சராசரி மதிப்பெண்களே பெற்றார். என்றாலும், பிரகாசமான மாணவனாகவும், கற்பதில் திடமான ஆர்வமும், படிப்பிற்காக, முக்கியமாக கணக்கு பாடத்திற்காக, பல மணி நேரங்கள் செலவளிப்பவராகவும், அவர் சித்தரிக்கப்படுகிறார்.இராமேஸ்வரம் தொடக்க பள்ளியில் தனது பள்ளி கல்வியை முடித்த பின்னர், கலாம் திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து, 1954 ஆம் வருடத்தில், இயற்பியலில் பட்டம் பெற்றார். அந்த பட்டப் படிப்பின் இறுதியில் கலாமிற்கு இயற்பியலில் ஆர்வம் இல்லாது போனதால், பின்னாளில் இந்த நான்கு வருட படிப்பைக் குறித்து வருத்தப்பட்டார். அவர் 1955 ஆம் ஆண்டில், எம் ஐ டி சென்னையில், விண்வெளி பொறி இயல் படிப்பிற்காக, சென்னை சென்றார். அங்கு அவர் முது கலை பட்டமும் பெற்றார். கலாம் பல கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்று இருந்தாலும், முறையான படிப்பை, எம் ஐ டி சென்னையில் படித்த முது கலை பட்ட படிப்பைக் கொண்டு முடித்தார்.

ஜனாதிபதியாக பதவி ஏற்குமுன் , அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் , (ISRO) ஒரு விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார் . 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1988 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.
கலாம், இந்தியாவின் முக்கிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்திய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தற்போது, பாட்னா மற்றும் அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றுவதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

தொழில்நுட்ப சென்னை நிறுவனம் (MIT) சென்னையில் 1960 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக சேர்ந்தார். கலாம் இந்திய இராணுவத்துக்காக ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்து பணித்துறையை தொடங்கினார். இருப்பினும் அவர் DRDO இல் சேர்ந்தது குறித்து ஒரு வித அதிருப்தியுடன் இருந்தார். பிரபல விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த INCOSPAR குழுவின் ஒரு அங்கமாகவும் கலாம் இருந்தார். 1969 ஆம் ஆண்டில் , கலாம் ISRO க்கு மாற்றப்பட்டு அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகனம் (launcher)(SLV-III) திட்டத்தின் இயக்குனர் ஆனார். (SLV-III) பாய்ச்சுதல் வாகனம் ரோகினி செயற்கைக்கோளை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக 1980 ல் ஏவியது. கலாமின் வாழ்வில் ISRO ல் சேர்ந்ததில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. கலாம் அவர்கள் SLV திட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தப் பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. கலாம் 1965 ல் DRDO ல் விரிவுப்படுத்தக்கூடிய வின்கலத்திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார். 1969 இல், கலாம் அரசாங்கத்தின் அனுமதிப் பெற்று மேலும் பல பொறியாளர்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.
   
1963-64 இல், அவர் நாஸாவின் ஹாம்ப்டன் வர்ஜீனியாவில் லாங்க்லியின் ஆராய்ச்சி மையம், கிரீன்பெல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம், மேரிலாண்ட் மற்றும் விர்ஜினியா கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வால்லோப்ஸ் விமான வசதி ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்தார். 1970 லிருந்து 1990 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் கலாம் போலார் SLV மற்றும் SLV-III திட்டங்களுக்காக முயற்சி மேற்கொண்டார். இரண்டு திட்டங்களும் வெற்றிகரமாக முடிந்தன.
கலாம் அணு ஆயுத வடிவமைப்பு , அபிவிருத்தி , மற்றும் சோதனைத் தள முன்னேற்பாடு ஆகியவற்றில் பங்கேற்காதபோதிலும், தேசத்தின் முதல் அணு ஆயுத சோதனையான புன்னகைக்கும் புத்தன் திட்டத்தைக் காண்பதற்காக ராஜா ராமண்ணாவால் TBRL இன் பிரதிநிதியாக அவர் அழைக்கப்பட்டார். 1970 இல், SLV ராக்கெட்டைப் பயன் படுத்தி ரோகினி - 1 விண்வெளியில் ஏவப்பட்டது ISRO இன் ஒரு சாதனை ஆகும். 1970 களில், கலாம் வெற்றிகரமான SLV திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து பாலிஸ்டிக்(ballistic) ஏவுகணைத் தயாரிப்புக்காக ப்ராஜெக்ட் ஃபெவில்-Project Devil மற்றும் ப்ராஜெக்ட் வாலியன்ட்-Project Valiant என்ற இரு திட்டங்களை இயக்கினார். மத்திய அமைச்சரவை மறுத்தபோதிலும் பிரதமர் இந்திரா காந்தி தனது தன்னதிகாரம் மூலம் கலாமின் கீழ் இயக்க உள்ள விண்வெளி திட்டங்களுக்கு ரகசிய நிதி ஓதிக்கினார். கலாம் மத்திய அமைச்சரவை இந்த விண்வெளி திட்டங்களின் உண்மையான தன்மையை மறைப்பதற்கு ஏற்கும்படி செய்வதில் முக்கியப்பங்கு வகித்தார். அவரது ஆராய்ச்சி மற்றும் கல்வி தலைமையால் அவருக்குக் கிடைத்த பெரும் வெற்றி மற்றும் கௌரவத்தால், 1980 களில், அவரை அரசாங்கம் தனது இயக்கத்தின் கீழ் ஒரு கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்க தூண்டியது.

 கலாம் மற்றும் டாக்டர் VS அருணாச்சலம், உலோகவியல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும் அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர் . வெங்கட்ராமனின் யோசனையைப் பின்பற்றி ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளின் தயாரிப்பில் ஈடுபட்டார்கள். ஆர் வெங்கட்ராமன் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டப் (IGMDP) பணிக்காக 388 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறுவதற்கும், கலாமை தலைமை நிர்வாகியாக்கவும் காரணமாக இருந்தார். அக்னி இடைநிலை தூர ஏவுகணை , ப்ரித்வி தந்திரோபாய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் பல ஏவுகணைகளை உருவாக்குவதில் ஏற்படும் தவறான நிர்வாகம், அதிக சிலவு மற்றும் கால விரயம் பற்றி குறையாக விமர்சிக்கப்பட்டாலும் கலாம் இந்தத் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். ஜூலை 1992 முதல் டிசம்பர் 1999 வரை அவர் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் DRDO இன் செயலாளராகவும் இருந்தார். அவர் இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்- II அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களித்தார். சோதனை கட்டத்தில் கலாம் , ஆர் சிதம்பரத்துடன் சேர்ந்து தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். ஊடகங்கள் எடுத்த புகைப்படங்கள் கலாமை நாட்டின் உயர்மட்ட அணு விஞ்ஞானியாக உயர்த்திக்காட்டியது.
1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான டாக்டர் சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை கெளரவப்படுத்தும் வகையில் "கலாம், ராஜூ ஸ்டென்ட்" என பெயரிடப்பட்டது. 2012 இல் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார வழிமுறைக்காக இவர்கள் வடிவமைத்த டேப்லெட் PC "கலாம், ராஜூ டேப்லெட்" என்று பெயரிடப்பட்டது.

Wednesday, October 24, 2012

அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவின் அழகான புகை படங்கள்.


அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவின் அழகான புகை படங்கள்.

இப்பதிவின் மூலம் யாரையும் ஆபத்தான கடல் பயணத்தை துண்டுவதட்கல்ல.
எமது நாட்டவர் ஆபத்தான கடல் பயணங்களையும் தாண்டி இங்கே தான் சென்று அடைகின்றார்கள் என்பதை தெரிவிப்பதே எனது நோக்கம்.

இதன் பரப்பு 135 sq km
பயன்பாட்டில் உள்ள மொழி ஆங்கிலம்
மக்கள் தொகை 2415

இத் தீவுக்கு தெற்கே 190 மைல்களில் இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரம்
வடமேற்காக 2200 மைல்களில் இலங்கையின் கிழக்கே அமைந்துள்ள கல்முனை நகரமும் அமைந்துள்ளது.

இங்கே
ஒரு தேசிய பூங்கா ஒன்றும் உள்ளது.










Saturday, September 22, 2012

உலகம் முழுவதும் சக்கைபோடு போடுகிறது "ஓபின் கங்க்னம் ஸ்டைல் பாடல்"

கொலைவெறி பாடல், தனது அனைத்து வெர்ஷனும் சேர்த்து யூடியூபில் 100 மில்லியன் பார்வையை பெற்றிருக்குமா?அதை தாண்டி 192 மில்லியன் பார்வைகளுடன் உலகம் முழுவதும் சக்கைபோடு போடுகிறது கொரியன் ஒருவரின் "ஓபின் கங்க்னம் ஸ்டைல்" (GANGNAM STYLE) பாடல்.ஒருதடவை பார்த்தவுடனேயே பசக் என்று மனதில் ஒட்டிவிடுகிறது " Psy 'இன் பாடலும் அவரின் நடனமும்!!இன்னமும் பல சாதனைகளுடன் எல்லோர் மனதிலும் சக்கை போடப்போகிறது இந்த கன்னம் ஸ்டைல் பாடல்..! ஒருதடவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.


"ஓபின் கங்க்னம் ஸ்டைல்" (GANGNAM STYLE) பாடல்.உருவான விதம்

 

Saturday, September 15, 2012

மதவாதம் வேண்டாம் - யாரையும் புண்படுத்தவும் வேண்டாம்

இது தான் தற்போது உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களை வேதனையில் ஆழ்த்தியுள்ள திரைப்படம்.

இத்திரைப்படத்தில் இறை தூதரான நபிகள் அவர்களை இழிவு படுத்தும் விதத்தில், அமெரிக்க பாதிரியார் மற்றும் இஸ்ரேலியர் ஒருவரினாலும் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்தில் இருந்து சில பகுதிகள்.


இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக இதை பதிவிடவில்லை. மத வெறியர்களை பாருங்கள். இச்செயலால் கிறிஸ்தவ சமூகத்தை அனைவரும் வெறுத்து ஒதுக்கின்றனர். இப்பதிவு தவறு என்றால், பின்னுட்டத்தில் தெரிவியுங்கள். பதிவு அகற்றப்படும்.

Monday, August 6, 2012

Recycle Bin இல் அழித்த கோப்புக்களை மீட்பதற்கான வழிமுறைகள்..

நாம் பயன்படுத்தும் கணினியில் சில சமயம் சில கோப்புகளை தவறுதலாக Delete செய்து விடுவோம். பிறகு அந்த கோப்புகளை Recycle Binக்கு சென்று எடுத்து கொள்வோம். Recycle binலிருந்தும் நீங்கள் தவறுதலாக கோப்புகளை delete செய்து விட்டால் எப்படி அந்த கோப்புகளை மீட்டெடுப்பது?
ஒரு சின்ன மென்பொருளை டவுன்லோட் செய்து நாம் இழந்த கோப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.
கீழே இருக்கும் வலைதளத்திற்கு சென்று டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.


இணையதள முகவரி
கீழே இருக்கும் படத்தைபோல் எந்த போல்டரில் நீங்கள் மீட்க போகும் கோப்பு இருந்ததோ அதை தந்து கிளிக் செய்தால் உங்களது கோப்பு ஒரு சின்ன பச்சை ஐகானுடன் வரும்.
இப்படி வந்தால் உங்களது கோப்பை(File) திரும்ப எடுக்க முடியும் என்று அர்த்தம்.
பிறகு வலது ஓரம் இருக்கும் Recover கிளிக் செய்தால் உங்களது கோப்பு திரும்ப கிடைத்துவிடும்.

Sunday, June 24, 2012

தமிழர் வரலாறு -Tamils History

தமிழர் வரலாறு -Tamils History
கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

Thursday, May 31, 2012

அகராதிகள் (இணையத்தில் மட்டுமே பயனாகுபவை)

*** தேவையான அகராதியின் படத்தில் சொடுக்கவும் *** 

கூகிள் தமிழ் - ஆங்கில அகராதியான இதில் சொற்களைத் தமிழில் 
தட்டச்சு செய்து சொடுக்கினால் அதற்குரிய பொருள் ஆங்கிலத்தில் 
தோன்றுகிறது. சொற்களுக்குரிய பொருள் சொற்களாகவும், 
தொடர்களாகவும் தோன்றுவதால் மாணவர்களுக்குத் தொடர்கள் 
உருவாக்குவதற்குரிய அடித்தளத்தை இந்த அகராதி ஆக்கும்










ஒருங்குறி தமிழில் தட்டச்சு செய்தால் அதற்குரிய பொருள் ஆங்கிலத்தில் வருகிறது. அச்சொல்லுக்குரிய பல பொருள்களைத் தருவது இதன் சிறப்பு. தொடக்க நிலை மாணவர்களுக்கு இந்த அகராதி பயனாகும். சொல்லுக்குரிய
பொருளை அறிந்து உள்வாங்க இந்த அகராதி உதவும்.











இதில் தமிழ்ச் சொற்களை ஒருங்குறியில் தட்டச்சு செய்து தேடினால் அதற்குரிய ஆங்கிலப் பொருள், தமிழ்ப் பொருள் இரண்டும் விளக்கத்துடன் தோன்றுகிறது, அதுமட்டுமல்லாமல் இந்தச் சொல் உள்ள பாரதியார், திருவள்ளுவர், ஔவையார் பாடல் வரிகளையும் காட்டுகிறது. திரைபடப் பாடல் வரிகளையும் காட்டுகிறது. மேல் பகுதியில் தட்டச்சு செய்து சொடுக்கினால் கீழே பொருள் உள்ள பக்கம் உருவாகுகிறது. தமிழ்ச் சொற்களிலிருந்து தொடர்களை உருவாக்கும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு இந்த அகராதி பயனாகும்.










இந்த அகராதியில் தமிழ் / ஆங்கிலச் சொற்களைத் தட்டச்சு செய்து சொடுக்கினால், அதற்குரிய பொருள் புதிய பக்கத்தில் உருவாகிக் காட்சி தரும். இதில் சொற்களின் முன் மற்றும் பின் ஒட்டுகளுடன் சொற்கள் உருவாகுவதால் மாணவர்களுக்கு இது சொற்களஞ்சியம் பெருக்க உதவும்.










60 க்கும் மேற்பட்ட மொழிகளில் தட்டச்சு செய்தாலும் அதனை மொழிமாற்றம் செய்யப் பயனாகுகிற அரிய அகராதியை கூகிள் வடிவமைத்துள்ளது. இதில் எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மாற்ற வேண்டும் என்பதை முறைப்டுத்திக் கொண்டு ஒருங்குறியில் சொற்களைத் தட்டச்சு செய்து சொடுக்கினால் அதற்குரிய மொழி மாற்றத்தை உடனடியாக அருகிலுள்ள கட்டத்திற்குள் காட்டுகிறது. தமிழ் மொழியையும் இந்த மொழிமாற்ற மென்பொருளில் இணைத்துள்ளது வாழ்த்துதற்குரியதே.
மாணவர்கள் தாங்கள் விரும்புகிற சொற்களை வலது புறத்தில் உள்ள கட்டத்தினுள் தட்டச்சு செய்து சொடுக்கினால் இடது புறத்தில் அதற்கான தமிழ்ச் சொல் தோன்றும். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் இந்தச் சொற்களை இது படித்தும் காண்பிக்கும். முதல் நிலை மாணவர்கள் இதனைப் பயன்படுத்தலாம்.










இந்தத் தமிழ் லெக்சிகன் அகராதியில் தமிழ்ச் சொற்களை ஒருங்குறியில் தட்டச்சு செய்து தேடினால் அதற்குரிய பொருள் தோன்றுகிறது. வேர்சொல்லில் அமைந்த வேறு வேறு பொருளுடைய சொற்களையும் இணைத்துள்ளது. ஆய்வாளர்களுக்குப் பயனாகுகிற வகையில் அமைந்த அகராதி இது.










அகராதியில் உள்ள பட்டியலின் எழுத்துகளைத் தேர்ந்தெடுத்து, அந்த எழுத்தில் இணைக்கப்பட்டுள்ள சொற்களைச் சொடுக்கினால் அதற்குரிய பொருள் வருகிறது. மாணவர்களுக்குப் பயனாகும் அகராதி இது.










அகராதியில் உள்ள இடத்தில் ஆங்கிலத்தில் சொற்களைத் தட்டச்சு செய்து தேடினால், அந்தச் சொல்லுக்கான பொருள் தோன்றுகிறது. மாணவர்களுக்கும் பயனாகும் அகராதி இது.










Monday, May 7, 2012

பொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்.

  •  
 இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கல்வி நிர்வாக சேவை, முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை மற்றும் சகல போட்டி பரீட்சைகளுக்கும் இப்புத்தகங்கள் உதவலாம்.

ஒரு நண்பியின் பரீட்சைக்காக இணையத்தில் பொதுச் சாதாரணப் பரீட்சை தொடர்பான வினாத்தாள்களை தேடிய போது கிடைத்த புத்தகங்களும், வினாத்தாள்களும்.
தேடல்கள் தொடரும், தொடர்ந்து இணைந்திருங்கள்.

Saturday, May 5, 2012

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில்


தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..பெரிய கோயில் அளவுகோல்...எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார் 1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.


பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு.
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர். அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு
கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் , நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள
உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.


மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

என் நண்பரின் முகபுத்தக பதிவில் இருந்து பெறப்பட்டது.

Thursday, April 12, 2012

நந்தன வருடத்துக்கான ராசி பலன்கள். அனைவருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


2012ம் ஆண்டு நந்தன வருடத்துக்கான ராசி பலன்கள்.
அனைவருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 




மேட ராசி
நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் அதிகம் உள்ளவர் நீங்கள். நந்தன புத்தாண்டு உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பதாலும், 9-வது ராசியில் உதிப்பதாலும் தொட்டது துலங்கும். ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நாடாளுவோரின் நட்பு கிட்டும். நீங்களும் பிரபலமாவீர்கள். பணபலம் கூடும். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு அழகான வாரிசு உண்டாகும். தடைப்பட்டிருந்த மகளின் திருமணம் இப்போது கைகூடும். சகோதர வகையில் மனக்கசப்புகள் விலகும். சொத்துப் பிரச்னைகளில் அனுகூலம் உண்டு. 17.5.12 முதல் குரு 2-ல் அமர்வதால் தாழ்வு மனப்பான்மை நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். ஆனி, ஆவணி மாதங்களில் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழப்பங்கள் நீங்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பெரிய பதவிகள் கிட்டும். சுற்றியுள்ளவர்களில் நல்லவர்-கெட்டவர்களை அடையாளம் காண்பீர்கள் கார்த்திகை, தை, மாசி மாதங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலை கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள உறவினர்- நண்பர்களால் திருப்பங்கள் ஏற்படும். சொத்துப் பிரச்னைகள் சாதகமாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 13.4.12 முதல் 11.9.12 வரை சனி 6-ல் நிற்பதால் புகழ், கௌரவம் உயரும். உங்களால் வளர்ச்சி அடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவுவர். பழைய கடனில் ஒரு பகுதி தீரும். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ஆனால் 12.9.12 முதல் வருடம் முடியும் வரை 7-ல் கண்டகச் சனியாக அமர்வதால் சிறு சிறு விபத்துகள், பண இழப்புகள் வந்து போகும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 17.10.12 முதல் 15.11.12 வரை சூரியன் சனியுடன் சேர்ந்து இருப்பதால், அந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கவனம் தேவை. 2.12.12 முதல் வருடம் முடியும் வரை ராசிக்குள் கேது நிற்பதால் தலைச்சுற்றல், முன்கோபம், ஒருவித சலிப்பு வந்து நீங்கும். 2.12.12 முதல் 7-ல் ராகுவும் நுழைவதால் மனைவியுடன் கருத்து வேறுபாடு, மன உளைச்சல் வந்து போகும். வியாபாரத்தில்... வைகாசி, ஆனி மாதங்களில் பற்று- வரவு உயரும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் தேடி வருவர். புது சலுகைகளால் போட்டியாளர்களைத் திகைக்க வைப்பீர்கள். கடையை நவீனப்படுத்துவீர்கள். சங்கத்தில் உங்களுக்கென்று தனியிடம் உண்டு. மருந்து, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் வகைகளால் ஆதாயம் உண்டு. வருட ஆரம்பம் முதல் 11.9.12 வரை 6-ல் சனி நீடிப்பதால் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் வந்து சேரும். வி.ஐ.பி-களும் வாடிக்கையாளர் ஆவார்கள். 12.9.12 முதல் சனி 7-ல் அமர்வதால் பங்குதாரர்களுடன் அவ்வப்போது கருத்து மோதல்கள் வரக்கூடும். கடன் தர வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரியுடனான மனக்கசப்புகள் விலகும். 17.5.12 முதல் குரு 2-ல் அமர்வதால் வேலைப்பளு குறையும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் புதிய பொறுப்புகள் சேரும். சம்பளம் உயரும். எனினும் 12.9.12 முதல் சனி 7-ல் அமர்வதால் அலுவலகம் மற்றும் மூத்த அதிகாரிகள் பற்றிய ரகசியங்களை வெளியிட வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்குமுன் யோசிப்பது நல்லது. கலைஞர்களின் படைப்புகளுக்கு மதிப்பு கூடும். அரசு கவுரவிக்கும். வீண் வதந்திகள் விலகும். கன்னிப் பெண்களின் கனவு நனவாகும். கல்யாணம் நடக்கும். வேலை கிடைக்கும். உயர்கல்வி அயல்நாட்டில் உண்டு. மாணவ- மாணவியருக்கு நினைவாற்றல் பெருகும்; கெட்ட நண்பர்களிடமிருந்தும் விடுபடுவதுடன், அதிக மதிப்பெண் பெறுவீர்கள். மொத்தத்தில் நந்தன புத்தாண்டு உங்களின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதாகவும், வசதி, வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்!
*********************************************************

ரிஷபம்
கடந்த கால நினைவுகளில் மூழ்கித் திளைப்பவர் நீங்கள். உங்களின் சுகாதிபதியின் நட்சத்திரத்தில் நந்தன வருடம் பிறக்கிறது. புதிய பாதையில் பயணிப்பீர்கள். நம்பிக்கைக்கு உரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்குவீர்கள். ஆனால், புத்தாண்டு 8-வது ராசியில் பிறப்பதால் அலைச்சல், உடல்நலக் குறை மற்றும் சிறுசிறு விபத்துகள் வந்து போகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். ஆனி, ஆடி மாதங்களில் திடீர் யோகம் உண்டு. அதிகார பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் கூடிவரும். 17.5.12 முதல் ஜென்ம குருவாக வருவதால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும். வேலைச் சுமை அதிகரிக்கும். உழைத்தும் பயனில்லையே எனும் ஏக்கம் வாட்டும். முக்கிய முடிவுகளைப் பலமுறை யோசித்து செயல்படுத்துங்கள். முன்கோபத்தால் முக்கியஸ்தர்களின் நட்பை இழக்க நேரிடலாம். 30.6.12 முதல் வருடம் முடியும் வரை ரோஹிணி நட்சத் திரத்திலேயே குரு செல்வதால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தியானம், யோகா போன்றவற்றில் நாட்டம் செலுத்துங்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து போகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்; மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். வங்கிக் கடனை அடைக்க வழி கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதிக்கு ஆடி, ஆவணி மாதங்களில் வாரிசு உருவாகும். வரவேண்டிய பணமும் தக்க நேரத்தில் வந்து சேரும். அரைகுறையாக நின்ற கட்டட வேலைகளையும் விரைந்து முடிப்பீர்கள். 23.6.12 முதல் 14.8.12 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து இருப்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தலை தூக்கும். தந்தையின் உடல்நிலை பாதிக்கும். வருடத்தின் பிற் பகுதியில் வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். சகோதர-சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து போவீர்கள். 11.9.12 வரை சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்டாதீர்கள். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து சாப்பிடுவதை, தொலைதூர பயணங்களைத் தவிர்க்கவும். 12.9.12 முதல் வருடம் முடியும் வரை சனி 6-ஆம் வீட்டி லேயே தொடர்வதால், வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்ய வங்கிக் கடன் கிடைக்கும். 2.12.12 முதல் கேது உங்கள் ராசியை விட்டு விலகுவதால், முன்கோபம் நீங்கும். ஆனால் கேது 12-ல் நுழைவதால் வீண் செலவுகள் வேண்டாம். 2.12.12 முதல் 6-ஆம் வீட்டுக்கு ராகு வருவதால் வி.ஐ.பி-கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வீர்கள். அரசு விஷயங்கள் உடனே முடியும். சனியுடன் ராகு 2.12.12 முதல் 13.4.13 வரை நீடிப்பதால், எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களை நம்பி அதிரடி முடிவுகள் எடுக்காதீர்கள். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, தலைமையிடம் மதிப்பு கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத்தைப் பெருக்குவீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப் படும். தை, மாசி, பங்குனி மாதங்களில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில், உங்களது உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரியின் கழுகுப் பார்வை இனி கனிவுப் பார்வையாக மாறும். தை, மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. கலைத்துறையினர், அரசால் கௌரவிக்கப் படுவார்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். கன்னிப் பெண்களுக்கு, உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தில் வெற்றியுண்டு. கல்யாணம் கைகூடும். மாணவ - மாணவியருக்கு மதிப்பெண் கூடும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வார்கள். அயல்நாட்டில் படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். மொத்தத்தில் இந்த நந்தன வருடம் வேலைச் சுமையையும் அலைச்சலையும் தந்தாலும் பண வரவையும், புகழையும் தருவதாக அமையும்!
*********************************************************************

மிதுனம்
எதையும் இலவசமாக ஏற்க விரும்பாதவர் நீங்கள். உங்களின் ராசிக்கு 7-வது ராசியில் நந்தன வருடம் பிறக்கிறது. திறமைகள் வெளிப்படும்; வேலை கிடைக்கும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். உங்கள் ராசியை சந்திரன் பார்க்கும்போது புத்தாண்டு பிறப்பதால், மன இறுக்கம் குறையும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். செலவுகள் குறையும். கணவன்-மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சொந்த ஊரில் மதிப்பு கூடும்.மகனுக்கு நல்ல மணப்பெண் வாய்ப்பாள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய சித்திரை மாதத்தில் வழி பிறக்கும். சகோதரர்கள் உதவுவர். 17.5.12 முதல் குரு பகவான் ராசிக்கு 12-ல் மறைவதால் திடீர் பயணங்கள், திடீர் செலவுகளால் திணறுவீர்கள். சுபச் செலவுகளும் அதிகரிக்கும். வேலை அதிகரிக்கும். புகழ், கௌரவம் வளரும். சவாலான வேலைகளையும் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 3-ல் நிற்பதால் வீடு, மனை வாங்குவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சொத்துப் பிரச்னைகளும், இதர வழக்குகளும் சாதகமாகும். சனி பகவான், 13.4.12 முதல் 11.9.12 வரை அர்த்தாஷ்டம சனியாக அமர்வதால், தாயின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வீண் பழிகளும் ஏற்படும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. கூடா நட்புகளைத் தவிர்க்கவும். புதியவர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண் டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். 12.9.12 முதல் சனி 5-ல் நுழைவதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வரக்கூடும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்விக்காக சிலரது சிபாரிசை நாட வேண்டி வரும். பூர்வீகச் சொத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். பாகப்பிரிவினை விஷயத்தில் உணர்ச்சிவசப்படாதீர்கள். 2.12.12 முதல் கேது லாப வீட்டுக்கு வருவதால் ஷேர் லாபம் தரும். மூத்த சகோதரர் பக்க பலமாக இருப்பார். ராகு 5-ஆம் வீட்டுக்கு வருவதால் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணியுங்கள். உங்களின் கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். சிலர் தங்களது பிள்ளைகளை உயர் கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிரிய வேண்டி வரும். 2.12.12 முதல் வருடம் முடியும் வரை 5-ஆம் வீட்டில் சனியும், ராகுவும் நிற்பதால் கர்ப்பிணிகள்... கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை மெடிஸ்கேன் மூலம் கண்காணிப்பது நல்லது கனமான பொருட்களை கவனமாகக் கையாளுங்கள் ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் பண வரவு, திடீர் யோகம் உண்டு. வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர். ஆவணியில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். கார்த்திகை, பங்குனி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். நண்பர்கள்- உறவினர்கள் உதவியால், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் உண்டு. போட்டிகள் அதிகமாகும். பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனையை ஏற்பர். ஆவணி, கார்த்திகை மாதங்களில் புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். வெளி நாட்டு நிறுவனங்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பங்குனியில் பதவி உயர்வு உண்டு! கலைஞர்களுக்குப் புகழ் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. கன்னிப் பெண்களுக்கு, எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வருட பிற்பகுதியில் திருமணம் முடியும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பர். உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு விடா முயற்சி யாலும், தன்னம்பிக்கையாலும் உங்களை சாதிக்க வைப்பதாக அமையும்!
************************************************************
கடகம்

சுற்றியிருப்பவர்களைச் சந்தோஷப்படுத்துபவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் நந்தன வருடம் பிறக்கிறது. எதையும் சாதிக்கும் வல்லமை பெறுவீர்கள். அலட்சியம் விலகும். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வார்கள். வழக்குகளில் தேக்க நிலை மாறும். வருட முற்பகுதி சாதிக்க வைப்பதாகவும், பிற்பகுதி சிக்கனத்தை உணர்த்துவதாகவும் அமையும். செவ்வாய் 2-ஆம் வீட்டில் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் பேச்சில் கடுமை வேண்டாம். சேமிப்பு கரையும். ஆனாலும் புது வீடு- மனை வாங்கும் அளவுக்கு பணமும் சேரும். உடன்பிறந்தோர் உங்களைப் புரிந்துகொள்வார்கள். அரசு காரியங்களில் வெற்றி உண்டு. தம்பதிக்கு இடையே சின்ன பிரச்னைகளைப் பெரிதுப்படுத்த வேண்டாம். பழைய கடனை பைசல் செய்வீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். சொந்த வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். 17.5.12 முதல் வருடம் முடியும் வரை குரு லாப வீட்டில் அமர்வதால், உங்கள் கை ஓங்கும். ஷேர், ஸ்பெகுலேஷன் மூலம் பணம் வரும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். எதிர்பார்த்த தொகை வந்து சேரும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். வங்கியில் கடனுதவி கிடைக்கும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. தம்பதிக்கு இடையே இருந்த வீண் சந்தேகங்கள், வாக்குவாதங்கள் நீங்கும். வருடத்தின் முற்பகுதியில் புது வாகனம் வாங்குவீர்கள். பாதியில் நின்றுபோன பணிகள்... வைகாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் முடிவடையும். வெளிநாட்டில் உள்ள உறவினர்-நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். 11.9.12 வரை சனி 3-ல் நிற்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 12.9.12 முதல் சனி 4-ல் அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி வந்து போகும்; ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தாய் வழி உறவினர்களால் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க நேரிடும். அரசாங்க வரிகளை உடனுக்குடன் செலுத்திவிடுங்கள். எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். எவரிடமும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அரசியல்வாதிகள் ஆதாரம் இல்லாமல் எவரையும் விமர்சிக்க வேண்டாம். தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். 2.12.12 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 10-ல் கேது நீடிப்பதால் நெருக்கமான ஒருவரை இழக்க நேரிடும். உத்தியோகத்தில் போராடி முன்னேறு வீர்கள். 2.12.12 முதல் ராகு 4-ஆம் வீட்டுக்கு வருவதால் தூக்கமின்மை வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில், போட்டியாளர்களைத் திணறடிக்கும் வகையில் உங்களின் அணுகுமுறை மாறும். புரட்டாசி மார்கழி, பங்குனி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளில் இழந்த பணத்தை மீட்பீர்கள். அரசாங்கத்தால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். பங்குதாரர்களின் கோரிக்கைகளை ஏற்பீர்கள். உத்தியோகத்தில், உங்களின் பணியை எல்லோரும் மதிப்பார்கள். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். 17.5.12 முதல் 10-ஆம் வீட்டை விட்டு குரு விலகுவதால், கேட்ட இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளைத் தகர்த்தெறிவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமானாலும் கட்டாயம் கிடைக்கும். கலைஞர்களுக்கு, சம்பள பாக்கி வந்து சேரும். பெரிய நிறுவனங்களில் இருந்து புது வாய்ப்புகளும் தேடி வரும். வருடத்தின் பிற்பகுதியில் அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையும்; தை மாதம் கல்யாணம் நடக்கும். மாணவர்கள், எதிர்பார்த்த பாடப்பிரிவில் சேர்வார்கள். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள். மொத்தத்தில் இந்த நந்தன வருடம், உங்களின் பண பலத்தை உயர்த்துவதாகவும், பழைய பிரச்னை களுக்கு நல்ல தீர்வு தருவதாகவும் அமையும்!
****************************************************

சிம்ம்
எதையும் ஆழமாக அலசி ஆராய்பவர் நீங்கள். புத்தாண்டு பிறக்கும்போது, குரு உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டில் பலம் பெற்றிருப்பதால், பண வரவு திருப்தியாக இருக்கும். உங்களின் சாதனைப் பட்டியல் நீளும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 5-வது ராசியில் நந்தன வருடம் பிறக்கிறது. பழைய பிரச்னைகள், கடன்கள், வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதிக்கு அழகான வாரிசு உருவாகும். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவாள். குழப்பங்கள், டென்ஷன் விலகும். சச்சரவுகள் குறையும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் சுபகாரியங்கள் கூடிவரும். 17.5.12 முதல் குரு ராசிக்கு 10-ல் நுழைவதால், எடுத்த வேலையை கடுமையான முயற்சிக்குப் பிறகே முடிக்க முடியும். வீண் பழி, ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பதவிகளைத் தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டி வரும். எவரை நம்பியும் எந்தப் பணியையும் ஒப்படைக்காதீர்கள். திடீர் பயணம், வீண் செலவுகள், காய்ச்சல், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். ஆனி, தை மாதங்களில் புது வாகனம் வாங்குவீர்கள். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் ராசிக்குள் அமர்ந் திருப்பதால் அடிக்கடி கோபப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. சகோதரர்களை நினைத்து சங்கடப்படுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. சனி பகவான் 11.9.12 வரை பாதச் சனியாக 2-ல் அமர்ந்திருப்பதால், பேச்சில் நிதானம்; கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. எவரிடமும் வாக்குறுதி அளிக்காதீர்கள். 12.9.12 முதல் சனி 3-ஆம் வீட்டுக்குள் நுழைவதால், புது சொத்து வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மூத்த சகோதர- சகோதரிகளால் ஆதாயம் உண்டு; அவ்வப்போது மனஸ்தாபமும் எழும். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி, சரியாகப் பராமரியுங்கள். 2.12.12 முதல் ராகு 3-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் சவால்களைச் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். வி.ஐ.பி-கள் உதவுவர். இளைய சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கேது 9-ல் நுழைவதால் தந்தையாருடன் கருத்துவேறுபாடுகள் வெடிக்கும். இரவு நேர - நெடுந்தூர பயணங்களைத் தவிர்க்கவும். ஐப்பசி, கார்த்திகை, தை மாதங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கும் விருப்பம் நிறைவேறும். தாய்மாமன், அத்தை வழியில் சங்கடங்கள் வரும். மார்கழி யில் அரசு விவகாரங்களில் இழுபறி ஏற்படும். தை, மாசி மாதங்களில் திடீர் பண வரவு, புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் திருமணம் கூடி வரும். அரசியல்வாதிகள், தலைமையைப் பகைக்க வேண்டாம். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். புது போட்டியாளர்கள் வருவர். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபம் உண்டு. தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கம்ப்யூட்டர், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். 17.5.12 முதல் குரு 10-ல் அமர்வதால் உத்தியோகத்தில் வேலைச் சுமை உண்டு. சின்ன சின்ன அவமானங்களால் வேலையை விட்டுவிடலாமா என்ற ஆதங்கம் வந்து போகும். விருப்பம் இல்லாத இடத்துக்கு மாற்றப் படுவீர்கள். மேலிடத்திலிருந்து நெருக்கடி அதிகரிக்கும். கணினித் துறையினர் புதிய வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. கலைஞர்கள், சின்ன வாய்ப்புகள் வந்தாலும் தவற விடாதீர்கள். கன்னிப் பெண்கள், புதிய நண்பர்களிடம் கவனமுடன் இருக்கவும். வருட முற்பகுதியில் நல்ல வரன் அமையும். மாணவர்களுக்கு, உயர்கல்வியில் வெற்றியுண்டு. நல்ல நிறுவனத்தில் எதிர்பார்த்த கல்விப்பிரிவில் சேருவீர்கள். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு திடீர் வளர்ச்சி மற்றும் பிள்ளைகளால் நிம்மதி ஆகியவற்றைத் தருவதாக அமையும்!
***********************

கன்னி

வாழ்க்கை வாழ்வதற்கே என நினைப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 4-வது ராசியில் நந்தன வருடம் பிறக்கிறது. நீங்கள், பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளை களின் திருமணத் தடை நீங்கும். வருடம் பிறக்கும்போது குரு 8-ல் நிற்பதால் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். கடனை நினைத்துக் கவலைப்படுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங் களில் கொடுத்த பணம் திரும்பி வரும். மகள் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனை உயர்கல்விக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவீர்கள். நீங்களும் அயல்நாடு சென்று வருவீர்கள். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 12-ஆம் வீட்டில் தொடர்வதால், உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு வரும். சொத்து விவகாரங்களில் ஏமாற்றம் வந்து நீங்கும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 17.5.12 முதல் குரு 9-ல் அமர்வதால் எதிர்பாராத பண வரவு, பெரிய பதவிகள், சொத்துச் சேர்க்கை யாவும் உண்டு. சேமிக்கத் துவங்குவீர்கள். ஆடி, புரட்டாசி மாதங்களில் சிறு சிறு விபத்து, காய்ச்சல், சளித்தொந்தரவு வந்து நீங்கும். முன்கோபத்தைத் தவிர்க்கவும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். இழுபறியாக இருந்த அரசு வேலைகள் முடியும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவர். அரசியல்வாதிகள், சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவார்கள். அண்டை வீட்டாருடனான சச்சரவுகள் நீங்கும். 13.4.12 முதல் 11.9.12 வரை ஜென்மச் சனியாக இருப்பதால் சோர்வு, ஏமாற்றம் வந்து நீங்கும். 12.9.12 முதல் பாதச்சனியாக தொடர்வதால் திடீர் பயணங்களும், திடீர் செலவுகளும் அதிகரிக்கும். காலில் அடிபட வாய்ப்பு உண்டு. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். பொங்குசனி நடைபெறுபவர்களுக்கு வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 2.12.12 முதல் ராகு உங்கள் 2-ஆம் வீட்டுக்கு வருவதால் பேச்சில் கவனம் தேவை. அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். எவரை நம்பியும் முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டாம். ராசிக்கு 8-ஆம் வீட்டுக்கு கேது வருவதால் வீண்பழி, மன உளைச்சல் வரக்கூடும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போகவும். இரவு நேர பயணங்கள் வேண்டாமே. சுபச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க புது விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று, சில முக்கியஸ்தர் களைச் சந்திப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாசி, பங்குனி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. இரும்பு, கெமிக்கல், ஸ்டேஷனரி மற்றும் கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில், உயரதிகாரிகளின் ராஜ தந்திரத்தை உடைத்தெறிவீர்கள். வருடத்தின் முற்பகுதியில் பதவி உயர்வு கிட்டும். வைகாசி, ஆனி மாதங்களில் புதிய பொறுப்பு வரும். உங்கள் மீதான பொய் வழக்கு தள்ளுபடியாகும். அயல் நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரும். கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில் அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலைவாய்ப்பும் தேடி வரும். கலைஞர்களுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும். எனினும் உங்களின் படைப்புகளுக்கு சிலர் உரிமை கொண்டாடுவர். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். ஏழரைச் சனி தொடர்வதால், கன்னிப் பெண்கள் எதிலும் கவனமுடன் செயல்படவும். கல்யாணத் தடை விலகும். தடைப்பட்ட கல்வியைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் சமயோசிதமாகச் செயல்படுவது நல்லது. கவிதை- கட்டுரைப் போட்டி களில் பரிசு வெல்வீர்கள். உயர்கல்வியிலும் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு எதிர்பாராத திருப்பங்களையும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் தருவதாக அமையும்!
**********************************************

துலாம்
கனிவான பேச்சால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 3-வது ராசியில் நந்தன ஆண்டு பிறப்பதால், முடியாததை முடித்துக் காட்டுவீர்கள். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதிர்பாராத பண வரவு உண்டு. நிர்வாகத்திறன் கூடும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு வாரிசு உண்டாகும். சித்திரை, வைகாசி மாதங்களில் அலைச்சல் இருந்தாலும் வளர்ச்சியும் உண்டு. வீடு கட்டுதல், நண்பர்-உறவினர் வீட்டு விசேஷங்களால் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போதும் கவனம் தேவை. சகோதரர்களுக்கு இடையே சச்சரவுகள் வந்து விலகும். ஆவணியில் சுப நிகழ்வுகள் கூடிவரும். பொன், பொருள் சேர்க்கையுண்டு. சொந்த ஊரில் மதிப்பு கூடும். தாம்பத்தியம் இனிக்கும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் காய்ச்சல், சளித் தொந்தரவு வந்து விலகும். வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். மகளுக்கு நல்ல வரன், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருட மத்தியில் சொத்துப் பிரச்னை தீரும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் புது சொத்து வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் மூலம் பணம் வரும். பழைய பிரச்னைகள் விலகும். 17.5.12 முதல் குரு 8-ல் அமர்வதால் அரசு விவகாரங்கள், வழக்குகளில் அலட்சியப் போக்கு கூடாது. வி.ஐ.பி-களை பகைக்க வேண்டாம். சிலரது சதியால் சொத்தை இழக்க நேரிடும். எதிலும் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். ஆவணி யில் எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். மாசி மாதத்தில் பிள்ளைகளால் அலைச்சலும், அவர்களுடன் கருத்து வேறுபாடும் வந்து போகும். பங்குனி மாதத்தில் அரசால் ஆதாயம் உண்டு. ஆனால், உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைவதால், வழக்கு விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். சிறுசிறு விபத்துகள், மனைவிக்கு உடல்நலக்குறை ஏற்படும். வருட மையப் பகுதியில் வீடு மாறுவீர்கள். வருட ஆரம்ப முதல் 11.9.12 வரை விரயச் சனி நடைபெறுவதால், தம்பதிக்கு இடையே விட்டுக்கொடுத்து போகவும். செலவுகளும் உண்டாகும். 12.9.12 முதல் வருடம் முடியும் வரை ஜென்மச்சனி. எனவே, பெரிய நோய் இருப்பதாக எண்ணுவீர்கள். நடைபயிற்சி அவசியம். கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கவும். கூழ், கஞ்சி போன்ற பாரம்பரிய உணவுகள் மிக நல்லது. 2.12.12 முதல் கேது 7-ல் அமர்வதால், மனைவிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கும். சிறு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியது வரும். ராகு உங்கள் ராசிக்குள் நுழைவதால் தலைச்சுற்றல், முன்கோபம் வந்துபோகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். வழக்குகளில் அவசர முடிவுகள் வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். சித்திரை, வைகாசி மாதங்களில் பெரிய நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். ஆடி, ஆவணியில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாசி, பங்குனி மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தைத் தவறவிடாதீர்கள். உத்தியோகத்தில் நெருக்கடிகள் நீங்கும். சக ஊழியர் களின் சம்பள உயர்வுக்காகப் போராடுவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சில நேரம் தன்மானத்தை விட்டுக்கொடுக்கவும் நேரிடலாம். ஆவணி, மாசி மாதங்களில் வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களிலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்கள், கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துவது சிறப்பு. மூத்த கலைஞர்களைப் பகைக்க வேண்டாம். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களுக்கு, கல்யாணத் தடை நீங்கும். மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் அவசியம். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்கள் வளர்ச்சியை தங்குதடையின்றி தொடர வைப்பதாக அமையும்.
*******************************************************

விருச்சிகம்

எந்த வேலையையும் உடனே செய்து முடிக்க நினைப்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு தன வீடான 2-ஆம் வீட்டில் நந்தன வருடம் பிறக்கிறது. தன்னம் பிக்கை பிறக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பி-களின் நட்பால் காரியம் சாதிப்பீர்கள். கற்பனையில் மூழ்காமல் களத்தில் இறங்கு வீர்கள். சித்திரை மாதம் செலவுகள் இருந்தாலும், அரசு காரியம் முடியும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உடன்பிறந்தவர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். புது சொத்து வாங்குவீர்கள். குழந்தை இல்லாத தம்பதிய ருக்கு குழந்தை பாக்யம் கிட்டும். பதவிகள் தேடி வரும். 17.5.12 முதல் குரு பகவான் 7-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்றுசேர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதலிடம் கிடைக்கும். பணத்தட்டுப்பாடு குறையும். அரசு பதவி கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். வழக்குகளில் வெற்றியுண்டு. அரைகுறையாக நின்றுபோன கட்டட வேலைகளையும் முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். புது வாகனம் வாங்குவீர்கள். 13.4.12 முதல் 11.9.12 வரை சனி லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீர் யோகம் உண்டு. வருமானம் உயரும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பால்ய நண்பர்கள் உதவுவர். 12.9.12 முதல் ஏழரைச் சனி தொடர்வதால் டென்ஷன் அதிகரிக்கும். தம்பதிக்கு இடையே சந்தேகங்கள் வரக்கூடும். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். ஆவணி, தை, மாசி மாதங்களில் திடீர் பண வரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எனினும், வீண் செலவுகள் வேண்டாம். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அரசு விஷயங்களில் எச்சரிக்கை தேவை. எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். மன உளைச்சல், ரத்த அழுத்தம் வந்துபோகும். 2.12.12 முதல் ராகு உங்கள் ராசியை விட்டு விலகுவதால், நெருக்கடிகள் குறையும். பெரிய நோய் இருப்பது போன்ற வீண் பயம் விலகும். கேது 6-ல் நுழைவதால் வழக்கு வெற்றியடையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வீண் அலைச்சல் குறையும். வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். விளம்பர யுக்திகளால், லாபத்தை பெருக்குவீர்கள். மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அனுபவசாலிகளை வேலைக்கு அமர்த்துவீர்கள். யாருக்கும் அதிக முன்பணம் தர வேண்டாம். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வருட மத்தியில் கடையை விரிவுபடுத்துவீர்கள். தை, மாசி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. புது பங்கு தாரர்களைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில், உங்களை எதிரியாக நினைத்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். உங்கள் கை ஓங்கும். வழக்கில் வெற்றி பெற்று, நீங்கள் இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். பதவி உயர்வு சித்திரை, வைகாசியிலேயே கிடைக்க வாய்ப்பு உண்டு. கலைத்துறையினரை, அலட்சியப்படுத்திய நிறுவனமே மீண்டும் அழைத்துப் பேசும். வதந்திகள் விலகும். சம்பள பாக்கி கைக்கு வரும். கன்னிப் பெண்களுக்கு தோஷங்களால் தடைப் பட்ட கல்யாணம், நல்லவிதத்தில் முடியும். வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை மாதங்களில் நினைத்ததைச் சாதிப்பீர்கள். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்கள், விளையாட்டை குறைத்து கணிதம், அறிவியல் பாடங்களில் அதிகக் கவனம் செலுத்துங்கள். தேர்வில் மதிப்பெண் கூடும். மொத்தத்தில் இந்த நந்தன வருடம் முடங்கிக்கிடந்த உங்களை முதலிடத்துக்கு அழைத்துச் செல்வதுடன் புது வசதி-வாய்ப்புகளையும் பெற்றுத் தருவதாக அமையும்!
**********************************************

தனுஷ்

மனதுக்கு சரியெனப்பட்டதை தயங்காமல் செயல் படுத்துபவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் குரு அமர்ந்திருக்கும் நேரத்தில், நந்தன வருடம் பிறக்கிறது. எதிர்ப்புகள் யாவும் அடங்கும். நீங்களும் வி.ஐ.பி ஆவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பண வரவு அதிகரிக்கும். எனினும், உங்கள் ராசியிலேயே நந்தன வருடம் பிறப்பதால், வேலை அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சித்திரை, வைகாசி மாதங்களில் எதிர்பார்த்த பணம் வரும். தடைப்பட்ட காரியங்கள் பூர்த்தியாகும். சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். கடனை அடைக்கும் வகையில் வருமானம் உயரும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பூர்வீகச் சொத்தை விற்றுவிட்டு புது சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் மேல் இருந்த கோபதாபங்கள் விலகும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். அம்மாவின் உடல்நலன் மேம்படும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 9-ஆம் வீட்டில் நிற்பதால் தந்தையுடன் கருத்துமோதல்கள் வந்து போகும். 17.5.12 முதல் உங்கள் ராசிநாதனான குரு பகவான் 6-ஆம் வீட்டில் நுழைவதால், செலவுகள் துரத்தும். குடும்பத்தில் எதைப் பேசினாலும் சண்டையில் போய் முடியும். கையிருப்பு கரையும். சொத்துப் பிரச்னைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டியது வரும். அரசு விவகாரங்களில் கவனம் தேவை. ஆனி, ஆடி மாதங்களில் சிறு சிறு விபத்துகள் வந்து நீங்கும். வழக்குகளில் இழுபறி நிலை உருவாகும். எவரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். முன்கோபத்தைத் தவிருங்கள். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் வருங்கால நலனுக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாரிசு இல்லையே என வருந்திய தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணத்துக்காக காத்திருப்போருக்கு சுபவேளை கூடிவரும். மார்கழியில் சற்றே உடல்நலக்குறைவும் அலைச்சலும் ஏற்படலாம். பணம் கேட்டு நச்சரிக்கும் உறவுகளிடம் உங்கள் நிலையை நயமாக எடுத்துச் சொல்லுங்கள். 13.4.12 முதல் 11.9.12 வரை சனி 10-ல் அமர்ந்திருப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். 12.9.12 முதல் 11-ஆம் வீட்டுக்கு சனி நுழைவதால், உத்தியோகத்தில் பிரச்னைகள் நீங்கும். வேலை சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். 2.12.12 முதல் ராகு லாப வீட்டில் நுழைவதால் எதிலும் வெற்றியே கிட்டும். ரியல் எஸ்டேட் மூலம் பணம் வரும். கேது உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டுக்கு வருவதால் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வர். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். வியாபாரத்தில் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. மக்கள் அதிகம் கூடும் இடத்தில் உங்களின் புதிய கடை அமையும். ஏற்றுமதி, இறக்குமதி, உணவு, பெட்ரோகெமிக்கல் வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். மாசி, பங்குனி மாதங்களில் புதிய பங்குதாரர்களைச் சேர்ப்பீர்கள். அரசாங்க கெடுபிடிகள் தளரும். உத்தியோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். வைகாசி மாதம் புது வேலை அமையும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும் சாதகமான சூழல் உருவாகும். மூத்த அதிகாரி உதவுவார். பதவி- சம்பள உயர்வு கிடைக்கும். மாசி, பங்குனி மாதங்களில் வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். கலைத் துறையினரின் கனவு நனவாகும்; படைப் புகள் பாராட்டப்படும். அரசு கௌரவிக்கும். மூத்த கலைஞர்களை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களுக்குக் கண்ணுக்கழகான கணவர் அமை வார். தடைப்பட்ட படிப்பைத் தொடர்வீர்கள். மாணவர் களுக்குப் பரிசு-பாராட்டு கிடைக்கும். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு அதிகச் செலவு, கடின உழைப்புக்கு உங்களை ஆட்படுத்தினாலும், வெற்றியையும் பெரும் புகழையும் பெற்றுத் தருவ தாக அமையும்!
***************************************

மகரம்

மன்னிப்பதில் மகத்தானவர் நீங்கள். உங்களின் பிரபல யோகாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று வலுவாக 5-ல் அமர்ந்திருக்கும் நேரத்தில், நந்தன வருடம் பிறக்கிறது. குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். பிரிந்த தம்பதியும் ஒன்றுசேர்வர். வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலை மாறும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். பெரிய மனிதர்கள் உதவுவார்கள். எனினும் உங்களின் 12-வது ராசியில் நந்தன வருடம் பிறப்பதால், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களிடம் பணம் அதிகமாக இருப்பதாகக் கருதி, பலரும் தொந்தரவு செய்வார்கள். தடைப்பட்ட கல்யாணப் பேச்சுவார்த்தையில், வைகாசி மாதம் முன்னேற்றம் உண்டாகும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு- மனை வாங்குவது, விற்பதில் இழுபறி நிலை மாறும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் விலகும். வரவே வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 8-ஆம் வீட்டில் தொடர்வதால், சகோதரர்களுடன் சச்சரவு ஏற்படும். செலவுகளும், சொத்துப் பிரச்னைகளும், சிறு சிறு விபத்துகளும், விலையுயர்ந்த பொருட்களின் இழப்பும் வந்து போகும். 17.5.12 முதல் குரு பகவான் ராசிக்கு 5-ல் நுழைவதால் தாயாருடனான மனத்தாங்கல் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலையில் அமர்வீர்கள். வருமானம் உயரும். பழைய வீட்டை விற்று, புது வீடு வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகள் விருப்பம் அறிந்து, செயல்படுவீர்கள். சகோதரர்களுடன் பாசப் பிணைப்பு அதிகரிக்கும். அம்மாவின் நெடுநாள் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். ஆனி மாதத்தின் பிற்பகுதியில் திடீர் பண வரவு உண்டு. வீடு- மனை சேரும். ஆடி மாதத்தில் வீண் செலவு, அலைச் சல், மனைவிக்கு உடல்நலக்குறைவு வந்து போகும். உடன் இருந்துகொண்டு உபத்திரவம் கொடுப்பவர்களை விலக்குவீர்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அக்கம்பக்கத்தாரிடம் அந்தரங்க விஷயங் களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். 13.4.12 முதல் 11.9.12 வரை சனி 9-ஆம் வீட்டுக்குள் நிற்பதால், கோர்ட் வழக்கில் நல்ல தீர்ப்பு கிட்டும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். 12.9.12 முதல் 10-ஆம் வீட்டுக்குள் சனி நுழைவதால், தந்தையின் உடல்நிலை சீராகும். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 2.12.12 முதல் ராகு உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டுக்குச் செல்வதால், உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும்.மறைமுக அவமானங்களும் வந்து போகும். ஆனாலும் பதவி, சம்பள உயர்வு உண்டு. 4-ஆம் வீட்டுக்கு கேது வருவதால் முன்கோபமும், சலிப்பும் மேலோங்கும். சில விஷயங்களை பலமுறை முயற்சித்து முடிப்பீர்கள். வியாபாரத்தில், தெளிவான முடிவெடுப்பீர்கள். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப செயல்படுவீர்கள். வைகாசி, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் லாபம் அதிகரிக் கும். கடையை சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக் கடன் தவணையை தாமதிக்காமல் செலுத்துவீர்கள். மூலிகை, அரிசி, பருப்பு, தேங்காய் மண்டி மற்றும் கட்டட வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில், வைகாசி அல்லது ஆனி மாதத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். புது சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. வேலை தொடர்பான வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கலைத் துறையினர், புகழ் அடைவார்கள்.அரசு விருது உண்டு. பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்து பேசும். கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் தேர்ச்சியடைந்து வேலையிலும் சேர்வீர்கள். மாணவர்களுக்கு, உயர்கல்வியில் வெற்றியுண்டு. அதிக மதிப்பெண்கள் எடுப்பீர்கள். மொத்தத்தில் இந்த புத்தாண்டு பண வரவும், வாழ்வில் புதிய சகாப்தத்தை படைக்கும் வல்லமையை யும் தருவதாக அமையும்!
****************************************************

கும்பம்

மற்றவர்கள் உரிமையில் தலையிடாத பண்பாளர் நீங்கள். உங்கள் ராசிக்கு 11-வது வீட்டில் நந்தன வருடம் பிறக்கிறது. சோம்பல் நீங்கும். உள்ளமும் உடலும் மலர்ச்சியாகும். கடந்த வருட பிரச்னைகளுக்கு இந்த வருடத்தில் நல்ல தீர்வுகள் உண்டு! தம்பதிக்கு இடையே பாசப்பிணைப்பு அதிகரிக்கும். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் அடிப்படை வசதிகள் பெருகும். பிரபலங்களின் நட்பும் கிடைக்கும். பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உங்கள் செயலில் கவனம் அதிகரிக்கும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் மகனுக்கு நல்ல மணப்பெண் வாய்ப்பாள். எதிர்த்தவர்களும் நட்பு பாராட்டுவார்கள். வி.ஐ.பி-கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். 23.6.12 முதல் 14.8.2012 வரை செவ்வாய் 8-ல் அமர்ந் திருப்பதால் மனைவிக்கு அறுவை சிகிச்சை வரக்கூடும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். 17.5.12 முதல் குரு 4-ஆம் வீட்டில் நுழைவதால் வேலைச்சுமை, ஏமாற்றம், மன உளைச்சல், ரத்த அழுத்தம், தாயார் மற்றும் உறவினர் பகை வரக்கூடும். குடும்ப வருமானத்தை உயர்த்தப் போராடுவீர்கள். வாகன விபத்து ஏற்படலாம். வெளிநாடு செல்வதற்கான தடைகள் நீங்கும். 13.4.12 முதல் 11.9.12 வரை ராசிநாதன் சனி பகவான் அஷ்டமத்துச் சனியாக வருவதால், எவரையும் விமர்சிக்க வேண்டாம். பண இழப்பு, காரியத் தடைகள், ஏமாற்றங்கள் வந்து போகும். 12.9.12 முதல் 9-ஆம் வீட்டுக்கு சனி வருவதால் தன்னம்பிக்கை துளிர்விடும். வழக்குகள் சாதகமாகும். ஆனால், தந்தையின் உடல்நிலை பாதிக்கும். மாசி, பங்குனி மாதங்களில் வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிருங்கள். அரசியல்வாதிகள், மற்றவரை விமர்சிப்பதைத் தவிர்க்கவும். சொத்து விஷயங்களில் நிதானம் தேவை. பாதியில் நின்றுபோன கட்டட வேலைகளைப் பூர்த்தி செய்து, புது வீட்டில் குடிபுகுவீர்கள். 2.12.12 முதல் ராகு உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டுக்குச் செல்வதால், தந்தையுடன் கருத்து வேறுபாடு வந்து போகும். கேது, ராசிக்கு 3-ஆம் வீட்டுக்கு வருவதால் தாயாரின் உடல் நிலை சீராகும். பழைய கடன் தீரும். தாம்பத்யம் இனிக்கும்.நவீன ஆபரணங்கள் சேரும். வியாபாரத்தில், அதிரடி மாற்றங்களால் போட்டியாளர் களை திகைக்கச் செய்வீர்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கடையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிப்பீர்கள். பங்குதாரர் களிடம் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பது நல்லது. இரும்பு, உணவு வகைகள், கட்டுமானப் பொருட்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில், பிடிப்பு ஏற்படும். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும்; சலுகைகளும் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெளி நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்கள் மீது மதிப்பு கூடும். கன்னிப் பெண்களுக்கு, கல்யாணம் சிறப்பாக முடியும். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்தவிதமான முடிவும் எடுக்க வேண்டாம். மாணவ-மாணவியரின் நினைவாற்றல் கூடும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. ஆசிரியர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். நல்ல நண்பர்களும் அறிமுகம் ஆவார்கள். விரும்பிய பாடப் பிரிவில் சேர்வார்கள். மொத்தத்தில் இந்த நந்தன வருடம்... பிரச்னைகள் மற்றும் செலவுகளில் உங்களைச் சிக்க வைப்பதாகத் தோன்றினாலும், கடின உழைப்பாலும் சமயோசித புத்தியாலும் இலக்கை எட்டிப்பிடிக்க வைப்பதாக அமையும்.
***************************************************

மீனம்

அடுத்தவரை வெற்றி பெற வைத்து அகமகிழ்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 10-வது ராசியில் நந்தன வருடம் பிறக்கிறது. உங்கள் சாதனை தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங் களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வருங்காலத்துக்காகச் சேமிக்கும் எண்ணம் வரும். புது வேலைக்கான முயற்சிக்குப் பலன் கிடைக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு வாரிசு உருவாகும். ஆடி மாதத்தில் பிள்ளை களின் உடல்நலனில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். மகளின் கல்யாணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். மகன் பொறுப்பாக நடந்துகொள்வார்; உயர்கல்வியில் ஆர்வம் காட்டுவார். ஆவணி மாதம் அரசு காரியங்கள் முடியும். அதிகார பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டட வரைபடமும் அப்ரூவல் ஆகும். சகோதர- சகோதரிகள் பாசமழை பொழிவர். வர வேண்டிய பணம் கைக்கு வரும். கைமாற்று கடனை அடைப்பீர்கள். நீண்டநாள் நிலுவையில் இருந்த தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற தருணம் வாய்க்கும். 13.4.12 முதல் 22.6.12 வரை செவ்வாய் 6-ஆம் வீட்டில் நீடிப்பதால்... உங்களின் மாறுபட்ட அணுகுமுறை மற்றும் விட்டுக்கொடுக்கும் போக்கால், பழைய பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். புறநகர் பகுதியிலாவது வீட்டுமனை வாங்கிவிடலாம் என்று முயற்சிப்பீர்கள். 17.5.12 முதல் குரு பகவான் ராசிக்கு 3-ல் அமர்வதால் சில விஷயங்கள் இரண்டாவது முயற்சியில்தான் முடியும். பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். பழைய நண்பர்கள், உறவினர்களிடம் பகை ஏற்படலாம். வீட்டுக் கடன் தவணையை கட்டுவதில் சிரமம் ஏற்படலாம். அனுபவ அறிவு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். 13.4.12 முதல் 11.9.12 வரை 7-ல் சனி தொடர்வதால் முன்கோபம், வீண் கவலைகள் வந்து போகும். மனைவியின் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். 12.9.12 முதல் அஷ்டமத்துச் சனியாக வருவதால் எதிலும் போராட்டம், மறைமுக விமர்சனம், தோல்வி மனப்பான்மை, வீண் பழி, பணப் பற்றாக்குறை, தம்பதிக்குள் பிரிவு வந்து நீங்கும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். சாட்சி கையெழுத்திட வேண்டாம். காசோலை தரும்போது, வங்கிக் கணக்கைச் சரிபார்ப்பது நலம். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். சில நேரம், பெரிய நோய் இருப்பது போல் தோன்றும். எனினும் பதற்றம் வேண்டாம். 2.12.12 முதல் கேது ராசிக்கு 2-ஆம் வீட்டுக்கு வருவதால், எவரையும் விமர்சிக்க வேண்டாம். ராகு 8-ஆம் வீட்டுக்கு வருவதால் திடீர்ப் பயணங்கள் அதிகமாகும். தந்தையின் உடல் நிலை மேம்படும். வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.சனியின் போக்கு சரியில்லாததால், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். கொடுக்கல் - வாங்கல் சம்பந்தமாக எதிலும் கையெழுத்திட வேண்டாம். புதிய நபர்களை நம்பி பெரிய முடிவுகள் வேண்டாம். மார்கழி, தை மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் வைகாசி, ஆனி மாதங்கள் சாதகமாக இருக்கும். ஆவணி மாதம் தலைமைக்கு நெருக்கம் ஆவீர்கள். மார்கழி, தை மாதங்களில் புது வாய்ப்பு தேடி வரும். கலைஞர்களுக்கு, திறமைகள் வெளிப்படும்; கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துங்கள். கன்னிப் பெண்களுக்கு, எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் பயில வாய்ப்பு கிடைக்கும். கல்யாணம் கூடிவரும். சிலருக்கு, வெளிநாட்டில் வேலை, மேற்கல்வி அமையும். மாணவர்களுக்கு, கல்வியில் அலட்சியம் கூடாது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசு-பதக்கம் கிடைக்கும். விரும்பிய கல்வி பிரிவில் போராடி இடம் பிடிப்பார்கள். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களைத் திட்டமிட்டு செயல்பட வைப்பதுடன், சிக்கனத்தின் அவசியத்தை உணர வைப்பதாகவும் அமையும்!

நன்றி விகடன் 

Monday, April 2, 2012

IPL Session 5 : சென்னையில் கோலாகல தொடக்க விழா

IPL T-20 ஐந்தாவது சீசன் போட்டி தொடக்க விழா, சென்னையில்  கோலாகலமாக நடக்கவுள்ளது. இதில் அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி, நடிகர் அமிதாப்பச்சன் உள்பட பலர் பங்கேற்கின்றனர். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 20-20 போட்டிகள், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 4 சீசன் போட்டிகள் நடந்துள்ளன. இதைத் தொடர்ந்து 5-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா  4-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
5-வது சீசனை பிரமாண்ட துவக்க விழாவுடன் நடத்த ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


போட்டி அட்டவணை

Wed Apr 4
20:00 local | 14:30 GMT
1st T20 - Chennai Super Kings vs Mumbai Indians
MA Chidambaram Stadium - Chepauk, Chennai
Thu Apr 5
20:00 local | 14:30 GMT
2nd T20 - Kolkata Knight Riders vs Delhi Daredevils
Eden Gardens, Kolkata
Fri Apr 6
16:00 local | 10:30 GMT
3rd T20 - Mumbai Indians vs Pune Warriors
Wankhede Stadium, Mumbai
Fri Apr 6
20:00 local | 14:30 GMT
4th T20 - Rajasthan Royals vs Kings XI Punjab
Sawai Mansingh Stadium, Jaipur
Sat Apr 7
16:00 local | 10:30 GMT
5th T20 - RCB vs Delhi Daredevils
M.Chinnaswamy Stadium, Bangalore
Sat Apr 7
20:00 local | 14:30 GMT
6th T20 - Deccan Chargers vs Chennai Super Kings
Andhra Cricket Association, Visakhapatnam
Sun Apr 8
16:00 local | 10:30 GMT
7th T20 - Rajasthan Royals vs Kolkata Knight Riders
Sawai Mansingh Stadium, Jaipur
Sun Apr 8
20:00 local | 14:30 GMT
8th T20 - Pune Warriors vs Kings XI Punjab
Subrata Roy Sahara Stadium, Pune
Mon Apr 9
20:00 local | 14:30 GMT
9th T20 - Deccan Chargers vs Mumbai Indians
Andhra Cricket Association, Visakhapatnam
Tue Apr 10
16:00 local | 10:30 GMT
10th T20 - RCB vs Kolkata Knight Riders
M.Chinnaswamy Stadium, Bangalore
Tue Apr 10
20:00 local | 14:30 GMT
11th T20 - Delhi Daredevils vs Chennai Super Kings
Feroz Shah Kotla, Delhi
Wed Apr 11
20:00 local | 14:30 GMT
12th T20 - Mumbai Indians vs Rajasthan Royals
Wankhede Stadium, Mumbai
Thu Apr 12
16:00 local | 10:30 GMT
13th T20 - Chennai Super Kings vs RCB
MA Chidambaram Stadium - Chepauk, Chennai
Thu Apr 12
20:00 local | 14:30 GMT
14th T20 - Kings XI Punjab vs Pune Warriors
Punjab C.A. Stadium, Mohali
Fri Apr 13
20:00 local | 14:30 GMT
15th T20 - Kolkata Knight Riders vs Rajasthan Royals
Eden Gardens, Kolkata
Sat Apr 14
20:00 local | 14:30 GMT
16th T20 - Pune Warriors vs Chennai Super Kings
Subrata Roy Sahara Stadium, Pune
Sun Apr 15
16:00 local | 10:30 GMT
17th T20 - Kolkata Knight Riders vs Kings XI Punjab
Eden Gardens, Kolkata
Sun Apr 15
20:00 local | 14:30 GMT
18th T20 - RCB vs Rajasthan Royals
M.Chinnaswamy Stadium, Bangalore
Mon Apr 16
20:00 local | 14:30 GMT
19th T20 - Mumbai Indians vs Delhi Daredevils
Wankhede Stadium, Mumbai
Tue Apr 17
16:00 local | 10:30 GMT
20th T20 - Rajasthan Royals vs Deccan Chargers
Sawai Mansingh Stadium, Jaipur
Tue Apr 17
20:00 local | 14:30 GMT
21st T20 - RCB vs Pune Warriors
M.Chinnaswamy Stadium, Bangalore
Wed Apr 18
20:00 local | 14:30 GMT
22nd T20 - Kings XI Punjab vs Kolkata Knight Riders
Punjab C.A. Stadium, Mohali
Thu Apr 19
16:00 local | 10:30 GMT
23rd T20 - Delhi Daredevils vs Deccan Chargers
Feroz Shah Kotla, Delhi
Thu Apr 19
20:00 local | 14:30 GMT
24th T20 - Chennai Super Kings vs Pune Warriors
MA Chidambaram Stadium - Chepauk, Chennai
Fri Apr 20
20:00 local | 14:30 GMT
25th T20 - Kings XI Punjab vs RCB
Punjab C.A. Stadium, Mohali
Sat Apr 21
16:00 local | 10:30 GMT
26th T20 - Chennai Super Kings vs Rajasthan Royals
MA Chidambaram Stadium - Chepauk, Chennai
Sat Apr 21
20:00 local | 14:30 GMT
27th T20 - Delhi Daredevils vs Pune Warriors
Feroz Shah Kotla, Delhi
Sun Apr 22
16:00 local | 10:30 GMT
28th T20 - Mumbai Indians vs Kings XI Punjab
Wankhede Stadium, Mumbai
Sun Apr 22
20:00 local | 14:30 GMT
29th T20 - Deccan Chargers vs Kolkata Knight Riders
Barabati Stadium, Cuttack
Mon Apr 23
20:00 local | 14:30 GMT
30th T20 - Rajasthan Royals vs RCB
Sawai Mansingh Stadium, Jaipur
Tue Apr 24
16:00 local | 10:30 GMT
31st T20 - Pune Warriors vs Delhi Daredevils
Subrata Roy Sahara Stadium, Pune
Tue Apr 24
20:00 local | 14:30 GMT
32nd T20 - Kolkata Knight Riders vs Deccan Chargers
Eden Gardens, Kolkata
Wed Apr 25
16:00 local | 10:30 GMT
33rd T20 - Kings XI Punjab vs Mumbai Indians
Punjab C.A. Stadium, Mohali
Wed Apr 25
20:00 local | 14:30 GMT
34th T20 - RCB vs Chennai Super Kings
M.Chinnaswamy Stadium, Bangalore
Thu Apr 26
20:00 local | 14:30 GMT
35th T20 - Pune Warriors vs Deccan Chargers
Subrata Roy Sahara Stadium, Pune
Fri Apr 27
20:00 local | 14:30 GMT
36th T20 - Delhi Daredevils vs Mumbai Indians
Feroz Shah Kotla, Delhi
Sat Apr 28
16:00 local | 10:30 GMT
37th T20 - Chennai Super Kings vs Kings XI Punjab
MA Chidambaram Stadium - Chepauk, Chennai
Sat Apr 28
20:00 local | 14:30 GMT
38th T20 - Kolkata Knight Riders vs RCB
Eden Gardens, Kolkata
Sun Apr 29
16:00 local | 10:30 GMT
39th T20 - Delhi Daredevils vs Rajasthan Royals
Feroz Shah Kotla, Delhi
Sun Apr 29
20:00 local | 14:30 GMT
40th T20 - Mumbai Indians vs Deccan Chargers
Wankhede Stadium, Mumbai
Mon Apr 30
20:00 local | 14:30 GMT
41st T20 - Chennai Super Kings vs Kolkata Knight Riders
MA Chidambaram Stadium - Chepauk, Chennai
Tue May 1
16:00 local | 10:30 GMT
42nd T20 - Deccan Chargers vs Pune Warriors
Barabati Stadium, Cuttack
Tue May 1
20:00 local | 14:30 GMT
43rd T20 - Rajasthan Royals vs Delhi Daredevils
Sawai Mansingh Stadium, Jaipur
Wed May 2
20:00 local | 14:30 GMT
44th T20 - RCB vs Kings XI Punjab
M.Chinnaswamy Stadium, Bangalore
Thu May 3
20:00 local | 14:30 GMT
45th T20 - Pune Warriors vs Mumbai Indians
Subrata Roy Sahara Stadium, Pune
Fri May 4
20:00 local | 14:30 GMT
46th T20 - Chennai Super Kings vs Deccan Chargers
MA Chidambaram Stadium - Chepauk, Chennai
Sat May 5
16:00 local | 10:30 GMT
47th T20 - Kolkata Knight Riders vs Pune Warriors
Eden Gardens, Kolkata
Sat May 5
20:00 local | 14:30 GMT
48th T20 - Kings XI Punjab vs Rajasthan Royals
Punjab C.A. Stadium, Mohali
Sun May 6
16:00 local | 10:30 GMT
49th T20 - Mumbai Indians vs Chennai Super Kings
Wankhede Stadium, Mumbai
Sun May 6
20:00 local | 14:30 GMT
50th T20 - RCB vs Deccan Chargers
M.Chinnaswamy Stadium, Bangalore
Mon May 7
20:00 local | 14:30 GMT
51st T20 - Delhi Daredevils vs Kolkata Knight Riders
Feroz Shah Kotla, Delhi
Tue May 8
16:00 local | 10:30 GMT
52nd T20 - Pune Warriors vs Rajasthan Royals
Subrata Roy Sahara Stadium, Pune
Tue May 8
20:00 local | 14:30 GMT
53rd T20 - Deccan Chargers vs Kings XI Punjab
Rajiv Gandhi Int. Stadium, Hyderabad
Wed May 9
20:00 local | 14:30 GMT
54th T20 - Mumbai Indians vs RCB
Wankhede Stadium, Mumbai
Thu May 10
16:00 local | 10:30 GMT
55th T20 - Deccan Chargers vs Delhi Daredevils
Rajiv Gandhi Int. Stadium, Hyderabad
Thu May 10
20:00 local | 14:30 GMT
56th T20 - Rajasthan Royals vs Chennai Super Kings
Sawai Mansingh Stadium, Jaipur
Fri May 11
20:00 local | 14:30 GMT
57th T20 - Pune Warriors vs RCB
Subrata Roy Sahara Stadium, Pune
Sat May 12
16:00 local | 10:30 GMT
58th T20 - Kolkata Knight Riders vs Mumbai Indians
Eden Gardens, Kolkata
Sat May 12
20:00 local | 14:30 GMT
59th T20 - Chennai Super Kings vs Delhi Daredevils
MA Chidambaram Stadium - Chepauk, Chennai
Sun May 13
16:00 local | 10:30 GMT
60th T20 - Rajasthan Royals vs Pune Warriors
Sawai Mansingh Stadium, Jaipur
Sun May 13
20:00 local | 14:30 GMT
61st T20 - Kings XI Punjab vs Deccan Chargers
Punjab C.A. Stadium, Mohali
Mon May 14
16:00 local | 10:30 GMT
62nd T20 - RCB vs Mumbai Indians
M.Chinnaswamy Stadium, Bangalore
Mon May 14
20:00 local | 14:30 GMT
63rd T20 - Kolkata Knight Riders vs Chennai Super Kings
Eden Gardens, Kolkata
Tue May 15
20:00 local | 14:30 GMT
64th T20 - Delhi Daredevils vs Kings XI Punjab
Feroz Shah Kotla, Delhi
Wed May 16
20:00 local | 14:30 GMT
65th T20 - Mumbai Indians vs Kolkata Knight Riders
Wankhede Stadium, Mumbai
Thu May 17
16:00 local | 10:30 GMT
66th T20 - Kings XI Punjab vs Chennai Super Kings
Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Thu May 17
20:00 local | 14:30 GMT
67th T20 - Delhi Daredevils vs RCB
Feroz Shah Kotla, Delhi
Fri May 18
20:00 local | 14:30 GMT
68th T20 - Deccan Chargers vs Rajasthan Royals
Rajiv Gandhi Int. Stadium, Hyderabad
Sat May 19
16:00 local | 10:30 GMT
69th T20 - Kings XI Punjab vs Delhi Daredevils
Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Sat May 19
20:00 local | 14:30 GMT
70th T20 - Pune Warriors vs Kolkata Knight Riders
Subrata Roy Sahara Stadium, Pune
Sun May 20
16:00 local | 10:30 GMT
71st T20 - Deccan Chargers vs RCB
Rajiv Gandhi Int. Stadium, Hyderabad
Sun May 20
20:00 local | 14:30 GMT
72nd T20 - Rajasthan Royals vs Mumbai Indians
Sawai Mansingh Stadium, Jaipur
Tue May 22
20:00 local | 14:30 GMT
Qualifier 1 T20 - TBC vs TBC
Subrata Roy Sahara Stadium, Pune
Wed May 23
20:00 local | 14:30 GMT
Eliminator T20 - TBC vs TBC
M.Chinnaswamy Stadium, Bangalore
Fri May 25
20:00 local | 14:30 GMT
Qualifier 2 T20 - TBC vs TBC
MA Chidambaram Stadium - Chepauk, Chennai
Sun May 27
20:00 local | 14:30 GMT
Final T20 - TBC vs TBC
MA Chidambaram Stadium - Chepauk, Chennai