இன்னும் சில தினங்களில் நாவல்கள் தரவேற்றபடவுள்ளன. உங்களுக்கு பிடித்த கதையாசிரியர்களின் கதைகளுடன். விரைவில் !!

Monday, July 29, 2013

வட மாகாண சபையும் - தேர்தலும்


வட மாகாண தமிழ் மக்களின் இன்னும் அக்கறையில்லாத/ நாட்டமில்லாத/ பயனில்லாத வட மாகாண சபை தேர்தல் எதிர்வரும் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் வட மாகாண தேர்தலில் பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ள இரு பிரதான அரசியல் கட்சிகளின் பிரசாரங்களின் போது பகிரப்படவுள்ள சாதனைகள், தேவைகள், குற்றசாட்டுகள் - கருத்து என் பார்வையில்:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசாரம் :

இணைந்த வட கிழக்கு தாயகம்
இழந்த உரிமை, இழந்த காணி, இழந்த சுதந்திரம், அடக்கு முறை, அரசியல் கைதி விடுதலை, இராணுவ முகாம், காணி அபகரிப்புகள், சிங்கள குடியேற்றங்கள் ஆகியவற்றை முன்னிறுத்தி ஈழ விடுதலை போராளிகளின் தியாகத்தினை  விற்பனை செய்ய மும்முரம் காட்ட போகும் தமிழ் தேசிய கூட்டமைப்பு.

ஒரு செல் சத்தம், ஒரு கிளைமோர் சத்தம், ஒரு கொத்தணி குண்டின் உக்கிரம் அறியாத ஒருவர் முதலமைச்சர் வேட்பாளர்.

ஆக மொத்தத்தில் 13ம் திருத்ததுக்காக 100,000க்கு மேற்பட்ட உயிர் தியாகங்களை விற்க்கப்போகும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசாரம்.


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசாரம் :

ஒரே நாடு ஒரே மக்கள்
அபிவிருத்தியும் நகரமாயமாக்களும், சுதந்திரம், போராளிகளின் புனர்வாழ்வு மற்றும் விடுதலை, தொழில் வாய்ப்புக்கள், பாதுகாப்பான வாழ்வு, குட்டி சிங்கபூர்,

முதலமைச்சர் வேட்பாளராக வருபவர் ஒற்றை சொல்லில் சொன்னால் " துரோகியாக " இல்லாமல் இருந்தால் ஓரளவுக்குக்கு போட்டி போடக்கூடிய நிலை இருக்கும்.

"மூளை சலவையில் யாரு வெற்றி பெறுவார்கள் என்பது எதிர்வரும் காலங்களில் தெரியும் "

இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது உறுதி. ஆனால் இனிமேல் இணைந்த வடகிழக்கு என்ற சொல்லுக்கு அரசு முற்று புள்ளி வைத்துள்ளது. இதுவே அரசுக்கு கிடைத்த வெற்றியே !!

பதின்மூன்றை வைத்து சோறு கூட சமைக்க முடியாது, இதற்க்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு விருந்து கொடுக்க போவதாக கூறுவது...................... (சொல்லவதுக்கு ஒன்றுமில்லை)

முடிவு மக்கள் கையில் !!

படத்தினை பெரிது படுத்த படத்தின் மீது கிளிக் செய்யவும்